tamilnadu

img

மோடி பைஜாமா போடும் முன்பே ராணுவம் உருவாகி விட்டது... ம.பி. முதல்வர் கமல்நாத் அதிரடி

போபால், ஏப்.15-பாஜக ஆட்சியில்தான் இந்திய ராணுவம் வலிமையாக இருக்கிறது என்று பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வரும் நிலையில், அதற்கு மத்தியப்பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் காண்ட்வா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட் டத்தில் கமல்நாத் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியிருப்பதாவது:பாஜக ஆட்சியில்தான் தீவிரவாதத் தாக்குதல்கள் குறைவாக நடந்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது அப்பட்டமான பொய். பாஜக ஆட்சியில்தான் பெருமளவு தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன.தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, தேசிய பாதுகாப்பையும், புல்வாமா சம்பவம் மற்றும் விமானப்படைத் தாக்குதலை குறிப்பிட்டு நீங்கள் பேசி வருகின்றனர். உங்கள் கட்டுப்பாட்டில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நீங்களாகவே கூறிக் கொள்கிறீர்கள். ஆனால், பிரதமர் மோடி அவர்களே. ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பைஜாமாவையும், பேண்ட்டையும் போடுவதற்குக் கற்கும் முன்பே,நேருவும் இந்திராவும் இந்தியாவின் முப்படையைக் கட்டமைத்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங் கள்.இவ்வாறு கமல்நாத் பேசியுள்ளார்.

;